அதிமுகவின் பொதுச் செயலாளர் அண்மையில் எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்று கொண்ட நிலையில் அவருக்கு தொடர்ந்து பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று டுவிட்டரில்  பேசிய இபிஎஸ், தொண்டர்களின் என்ன ஓட்டத்தை அறிந்ததால் அவர்கள் மகிழும் வகையில் பணியாற்றுவேன் என உறுதி கூறியுள்ளார். அதிமுக தொடங்கியது முதல் இன்று வரை சோதனைகளை சந்தித்து வருகிறது.

நீதிமன்றம் மூலம் கட்சியை கைப்பற்ற நினைத்தவர்கள் அன்றும் அதிமுக அரசுக்கு எதிராக வாக்களித்ததாக சாடிய அவர், தான் முதல்வராக பொறுப்பேற்று பெரும்பான்மையை நிரூபித்த போது ஸ்டாலின் வன்முறையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டினார்.