அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்றுக்கொண்டார். இதனை தொடர்ந்து அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்ற அதற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மேல தாளங்கள் முழங்க 50 வகையான சீர்வரிசையுடன் எடப்பாடி பழனிச்சாமி வீட்டிற்கு சென்றார்.

எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராக பதவி ஏற்ற பின் தமிழக முழுவதும் அதிமுகவினர் கொண்டாடி வருகின்றனர். அதன்படி எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு சென்ற முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் 350 கார்கள் மூலமாக 50 வகையான சீர்வரிசைகளுடன் சென்று தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் இந்த சீர்வரிசையில் கன்றுடன் பசு மாடு, ஆடு மற்றும் கோழிகளும் இடம்பெற்றுள்ளது.