திருப்பூர் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் ஏ.பி.முருகானந்தம் வேட்பாளராக போட்டியிடுகிறார். இவரது காரை கோபிசெட்டிபாளையம் பகுதியில் பறக்கும்படை அதிகாரிகள் சோதனை செய்ய முயன்றனர். அப்போது அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர், ஆயுசு முழுக்க கோர்ட்க்கு அலைய வச்சிடுவேன் என மிரட்டும்படி பேசியிருந்தார்.

இந்நிலையில், நான் பேசியதாக வெளியான வீடியோ பாதியை எடிட் செய்து பாதியை போட்டு இருக்கிறார்கள். நான் அந்த வழியாக சென்றபோது என்னை ஒருமையில் பேசினர். அதனால் தன்மையாக பேசுங்கள் என கூறினேன் என அவர் கூறியுள்ளார்.