நடிகரும், பிரபல இயக்குனருமான செல்வராகவன் ட்விட்டரில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர். அவர் தன்னுடைய படங்கள் மட்டுமல்லாமல் அவ்வப்போது பொதுவாகவும் ஏதாவது கருத்து தெரிவித்து வருபவர். மன அமைதி, நிம்மதிக்கு என்ன செய்ய வேண்டும் என்றும் ஏதாவது ட்வீட்  செய்வார்.   இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் மலையாள இசை குறித்து பதிவிட்டிருப்பது பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

அதில், “கடந்த சில வருடங்களாக தான் மலையாள மொழி இசை, திரைப்படங்கள் மற்றும் இண்டி இசைக்கு மிகவும் அடிமையாகிவிட்டேன், அதன் ஏற்பாடுகள் மற்றும் குரல்களின் தரம் மனதைக் கவர்கிறது. எப்பொழுதும் புதிய ஒலிகளைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற அவர்களின் தேடல் அலாதியானது” என்று பதிவிட்டுள்ளார்