தமிழ் சினிமாவில் தற்போது உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தளபதி விஜயை திரையுலகில் அறிமுகப்படுத்திய பெருமை அவருடைய தந்தை எஸ்ஏ சந்திரசேகரும். நடிகர் விஜயின் மார்க்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் உயர்வதற்கு அவருடைய அப்பாவின் உழைப்பும் பின்னணியில் இருக்கிறது. ஆனால் கடந்த சில வருடங்களாகவே நடிகர் விஜய்யும் அவருடைய அப்பாவும் பேசிக் கொள்வதில்லை என தகவல்கள் வெளிவருகிறது. நடிகர் விஜய் பெயரில் தனியாக கட்சி ஆரம்பிக்க வேண்டும் என எஸ்ஏ சந்திரசேகர் முயற்சி செய்ததால் அவருடைய நடவடிக்கை பிடிக்காமல் தன்னுடைய அப்பாவிடம் இருந்து விஜய் ஒதுங்கி விட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் எஸ்ஏ சந்திரசேகர் பேட்டி ஒன்றில் தனக்கும் தன்னுடைய மகனுக்கும் இருக்கும் பிரச்சினை குறித்து பேசி உள்ளார். அவர் கூறியதாவது, ஒன்றரை வருடத்திற்கு முன்பு ஏற்பட்ட ஒரு சிறிய பிரச்சனை ஊடகங்களும் மீடியாக்களும் ஊதி பெரிதாக்கிவிட்டது. சமீபத்தில் ரிலீசான வாரிசு படத்தை நானும் விஜயும் சேர்ந்தே பார்த்தோம். நானும் விஜயும் எப்போதும் அன்பை வெளிப்படையாக காட்டிக் கொள்ள மாட்டோம். அதேபோன்று அடிக்கடி பேசிக் கொள்ளவும் மாட்டோம். ஆனால் எங்கள் அன்பு எப்போதுமே மிக உறுதியானது என்று கூறியுள்ளார். மேலும் இந்த பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.