மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடி பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரமான சம்பவம் குறித்த வீடியோ வெளியானது அடுத்து நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மணிப்பூர்  கலவரத்தில் மெய்தி இனத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் பழங்குடியின பெண்ணை நிர்வாணமாக்கி அவரின் அந்தரங்க பாகங்களை வலுக்கட்டாயமாக தொட்டு இழுத்துச் சென்ற சம்பவம் தொடர்பான வீடியோ ஜூலை 19-ம் தேதி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரத்தில், முக்கிய குற்றவாளியான மெய்தி இனத்தைச் சேர்ந்த ஹெரோதாஸ் (32) என்பவர் நேற்று (ஜூலை 20) காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், ஹெரோதாஸின் செயல் ஒட்டுமொத்த மெய்தி இன மக்களுக்கே அவமானத்தை தேடி தந்ததாக கூறி, அவரது வீட்டை பெண்கள் அடித்து நொறுக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.