நாடு முழுவதும் ரயில்வே துறையில் 2.24 லட்சம் காலி பணியிடங்கள் இருப்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது. மத்திய பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் சந்திரசேகர கவுர் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டப்படி தாக்கல் செய்த கேள்விக்கு ரயில்வே அமைச்சகம் பதில் அளித்துள்ளது.

அதன்படி ரயில்வே துறையில் குரூப் சி பிரிவில் லெவல் 1 உட்பட இரண்டு லட்சத்தி 74 ஆயிரத்து 580 பணியிடங்கள் காலியாக உள்ளன.அதில் பாதுகாப்பு பிறவியில் மொத்தம் ஒரு லட்சத்து 77 ஆயிரத்து 924 காலி பணியிடங்கள் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் நாடு முழுவதும் ரயில்வேயில் 3.12 லட்சம் காலி இடங்கள் இருப்பதாக ரயில்வே துறை அமைச்சர் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.