உரிய வருமான வரி செலுத்தவில்லை எனக் கூறி, காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை ₹1800 கோடி அபராதம் செலுத்த நோட்டீஸ் அனுப்பியது. இதற்காக காங்கிரசின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு, அதில் இருந்த ₹135 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில், வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் இன்று காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.