தொலைத் தொடர்பு துறையில் இருந்து பேசுவதாக ஆள் மாறாட்டம் செய்து வரும் மோசடி அழைப்புகளில் எச்சரிக்கையாக இருக்குமாறு தொலைத்தொடர்பு துறை மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசின் தகவல் தொடர்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சைபர் குற்றவாளிகள் இத்தகைய அழைப்புகள் மூலம் மோசடியில் ஈடுபடுகிறார்கள். இது போன்ற அழைப்புகள் மற்றும் முறைகேடுகளால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு இருந்தால் சைபர் கிரைம் உதவி எண் 1930 அல்லது www.cybercrime.gov.in  என்ற இணையதளம் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.