விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான நீயா நானா நிகழ்ச்சியை ஆரம்பத்தில் இருந்து கோபிநாத் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சிக்கு மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. ஒவ்வொரு வாரமும் புதுவிதமான தலைப்பை கொண்டு விவாதம் நடைபெற்று வரும் இடையில் இந்த வாரம் உழவர் தின சிறப்பு நிகழ்ச்சியாக ஒரு பக்கம் தமிழர் கலைகளில் தேர்ச்சியானவர்களும், மற்றொரு பக்கம் சின்னத்திரை பிரபலங்களும் கலந்து கொள்கின்றன.

அதில் கலைகளில் தேர்ச்சி பெற்றவர்கள் பிரபலங்களுக்கு கலையை கற்றுக் கொடுக்கின்றனர். அப்போது இரண்டு பெண்கள் பட்டுப் புடவை கட்டிக்கொண்டு குஸ்தி போட்டிக்கு தயாராகின்றனர். அவர்களின் இந்த முயற்சியை பார்த்த கோபிநாத் வாய் அடைத்து போய் உள்ளார். அது தொடர்பான ப்ரோமோ காட்சி வெளியாகி உள்ளது.