நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் நினைவிடத்தில் நடிகை ரேகா அஞ்சலி செலுத்தினார். உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நடிகர் விஜயகாந்த் டிச.28ஆம் தேதி காலமானார். விஜயகாந்த் மறைவிற்கு நேரில் அஞ்சலி செலுத்த முடியாதவர்கள் அவர் நல்லடக்கம் செய்யப்பட்ட கோயம்பேடு, தேமுதிக அலுவலகத்தில் தினந்தோறும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

நடிகை ரேகா நேற்று விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் பேசிய அவர், விஜயகாந்த் இறுதி ஊர்வலத்தில் அவருடைய மகன்கள் அழுததை பார்த்து நான் கண் கலங்கி அழுதேன் என அவர் தெரிவித்தார்.