நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் 12வது படிக்கும் மாணவன் சின்னத்துரை மற்றும் அவருடைய தங்கை சந்திராதேவி ஆகியோர் மீது சக மாணவர்கள் ஜாதிய ரீதியான பிரச்னையில் வீடு புகுந்து கொலைவெறித் தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த சம்பவம் குறித்து இயக்குனர் மாரி செவ்ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், ”கடந்த இரண்டு நாட்களாக இந்த படிகட்டுகளில் சொட்டிக்கொண்டிருக்கும் சூடான இரத்தத்தின் கதையை யாரிடமாவது சீக்கிரம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள் .

காய்ந்து போனால் அதை பழைய புண்ணாக்கி எளிதாக எல்லாரையும் கடந்து போகசொல்லி உங்கள் இதயம் உங்களுக்கே தெரியாமல் எல்லாரிடமும் மன்றாட ஆரம்பித்துவிடும்” என பதிவிட்டுள்ளார்.