நாகை – இலங்கை பயணிகள் கப்பல் சேவை தொடக்க நாளில் மட்டும் பயண கட்டணத்தில் 75% சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. ‘செரியபாணி’ என்ற நாகை – இலங்கை இடையேயான கப்பல்  போக்குவரத்து சேவை அக்டோபர் 14 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. அக்டோபர் 14 ஆம் தேதி மட்டும் ரூ.2,803 என பயணக்கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக கப்பலில் பயணம் செய்ய ரூ. 7,670 ஆக இருந்த நிலையில் முதல் நாளில் மட்டும் சலுகை அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த சொகுசு கப்பல் ஒவ்வொரு வாரமும் இயக்கப்படுகிறது. பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வரும் இலங்கைக்கு  தற்போது சுற்றுலா பயணிகள் உடைய வருகையும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கப்பல் போக்குவரத்து மேம்படுத்தும் விதமாக இது சுற்றுலா மற்றும் வர்த்தக ரீதியில் உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.