நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஏ.டி.எம் மகளிர் கல்லூரியில் நாகை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பாக தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றுள்ளது. இதில் மண்டல வேலைவாய்ப்பு இணை இயக்குனர் சந்திரன், உதவி திட்ட அலுவலர்கள் முருகேசன், பாலன், சீனிவாசன் உட்பட பல கலந்து கொண்டனர். இந்த முகாமிற்கு மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கி பேசியுள்ளார். மேலும் எம்எல்ஏக்கள் முகமது ஷா நவாஸ், நாகை மாலி ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். இந்த முகாமில் 90-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டது. இந்நிலையில் வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்ட 2035 பேரில் 669 பேர் பணி நியமனம் பெற்றுள்ளனர்.
நாகையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்… கலந்து கொண்ட இளைஞர்கள்…!!!!!
Related Posts
“பள்ளியை மூடக்கூடாது” மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்ட மக்கள்…!!
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பகுதியில் 1990ஆம் ஆண்டு நடுநிலைப்பள்ளி தொடங்கப்பட்டு தற்போது வரை செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் 10-க்கும் மேற்பட்ட கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் படித்து வருகிறார்கள். இந்த ஆண்டுக்கான தேர்வுகள் முடிந்த நிலையில் பள்ளியில் போதுமான நிதி இல்லை…
Read more“சிறுமிக்கு பாலியல் தொல்லை”…. மதபோதகர் போக்சோவில் கைது…. கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி…!!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ராயல் டவுன் என்ற பகுதி உள்ளது. இந்தப் பகுதியில் மே வால்ட் (54) என்பவர் வசித்து வருகிறார். இவர் மத்திகிரி பகுதியில் உள்ள ஒரு தேவாலயத்தில் மத போதகராக இருக்கிறார். இந்த பகுதியில் நேபால் நாட்டைச்…
Read more