தமிழகத்தில் ரயில் பயணிகளின் வசதிக்காக அவ்வபோது பண்டிகை நாட்கள் மட்டும் முக்கிய விடுமுறை நாட்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதே சமயம் சிறப்பு ரயில்கள் பயணிகளின் வசதிக்காக அடிக்கடி நீட்டிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிப்பதற்காக நாகர்கோவில் மற்றும் தாம்பரம் இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் சேவை மேலும் சில நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி இந்த ரயில் சேவை ஆகஸ்ட் 13, 20, 27 மற்றும் செப்டம்பர் 3, 10 ஆகிய தேதிகள் வரை இயக்கப்படும். அதனைப் போலவே மறு மார்க்கத்தில் ஆகஸ்ட் 14, 21, 28 மற்றும் செப்டம்பர் 4 , 11 ஆகிய தேதி வரை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.