நாம் கலாச்சார மோதலை ஊக்குவிக்காமல் நமக்கான நல்லிணக்கத்தை வலியுறுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். சௌராஷ்ட்ரா தமிழ் சங்கமம் நிறைவு விழாவில் இன்று பிரதமர் மோடி வீடியோ கான்பிரன்சிங் மூலமாக உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், இந்தியா என்பது பன்முகத் தன்மையை சிறப்பு என நினைத்து வாழும் நாடு. வெவ்வேறு மொழிகள் மற்றும் கலைகள் ஆகியவற்றை நாங்கள் கொண்டாடுகிறோம். நமது நம்பிக்கை முதல் ஆன்மீகம் வரை எல்லா இடங்களிலும் பன்முகத் தன்மை உள்ளது. நாம் கலாச்சார மோதலை ஊக்குவிக்காமல் நமக்கான நல்லிணக்கத்தை வலியுறுத்த வேண்டும். கலாச்சார மோதலை ஊக்குவிக்க கூடாது என்று அவர் கூறியுள்ளார்.