வானில் ஒரு ஹெலிகாப்டர் மற்றொரு சேதமடைந்த ஹெலிகாப்டரை கயிறு மூலம் கட்டித் தூக்கிச் சென்றபோது நடந்த விபத்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இமயமலைப் பகுதியில் பழுதடைந்த ஒரு ஹெலிகாப்டரை பழுதுபார்ப்பதற்காக மற்றொரு பெரிய ஹெலிகாப்டர் கொண்டு சென்றது.
ஆனால், நூற்றுக்கணக்கான அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது, திடீரென கட்டப்பட்டிருந்த கயிறு அறுந்து அல்லது சமநிலை தவறி, தூக்கிச் செல்லப்பட்ட ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்தது. மலை முகடுகளில் மோதி அது சுக்குநூறாக நொறுங்கும் காட்சி பார்ப்பவர்களை உறைய வைக்கிறது.
תיעוד דרמטי – התרסקות הינשוף בגוש עציון:
מסוק הינשוף היה תקוע בשטח במשך מספר ימים, ואי אפשר היה להגיע לחלץ אותו באמצעות רכב מהיבשה. בחיל האוויר ביצעו תרגולת שבמסגרתה מסוק התובלה הכבדה ׳יסעור׳ מחלץ את הינשוף מהאוויר.
באמצע טיסת החילוץ – הרתמות השתחררו. בחיל האוויר פתחו בתחקיר של… pic.twitter.com/N1b0kTDdpf— דורון קדוש | Doron Kadosh (@Doron_Kadosh) January 16, 2026
“>
இந்தத் துரதிர்ஷ்டவசமான சம்பவத்தின் போது கீழே விழுந்த ஹெலிகாப்டரில் யாரும் இல்லாததால் பெரும் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது. இருப்பினும், ஒரு ஹெலிகாப்டர் பொம்மையைப் போல காற்றில் சுழன்று கீழே விழுந்து நொறுங்கிய விதம் வான்வழிப் போக்குவரத்துப் பாதுகாப்பில் உள்ள சவால்களைக் காட்டுகிறது.
இதனால் தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே இந்த வீழ்ச்சி ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை பார்த்திராத இந்த அரிய மற்றும் அதிர்ச்சியூட்டும் காணொளி தற்போது இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
