தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை நயன்தாரா. இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் லேடி சூப்பர் ஸ்டார் என்றும் ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். இவர் கடந்த வருடம் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் விக்னேஷ் சிவன் சேனல் ஒன்றுக்கு கொடுத்த பேட்டியில், பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து உள்ளார். அதில் இயக்குனர் நெல்சன் என்னுடைய சின்ன வயதில் இருந்த நண்பன். இயக்குனர் லோகேஷனை இப்போதுதான் மாநகரம் படத்திலிருந்து தெரியும்.

ஒரு முறை நான், நானும் ரவுடிதான் படத்திற்கான படப்பிடிப்பு செய்து கொண்டிருந்தேன். அதில் நயன்தாரா அழுவது போல் ஒரு காட்சி. அவங்க ரோட்டில் அழுது கொண்டு வராங்க. அப்போது ஒருவர் ஓடி வந்து நயன்தாரா நயன்தாரா என்று கூறினார். நயன்தாரா அழுது கொண்டே வரும்போது அவங்களும் கூடவே வந்தாங்க. ஆனால் நயன்தாரா நான் கட் என்று சொல்ற வரைக்கும் அவங்க நடிச்சுக்கிட்டே இருந்தாங்க. உடன் வந்தவர் நயன்தாரா அழுவதை பார்த்து என்ன ஆச்சு மேடம் அப்படினு கேட்டுகிட்டே வராரு.

மூணு தடவை படப்பிடிப்பு செய்யறப்ப ரொம்ப கூட்டம் சேர்ந்துட்டு. எங்களால முடியாது. மறுநாள் நயன்தாராவை எங்கேயாவது நடுரோட்டில் இறக்கி விட்டுருவோம். அவங்களும் அழுதுகிட்டே வந்து வேலையை முடிச்சு கொடுப்பாங்க. ரொம்பவே கஷ்டப்பட்டுட்டேன். அப்புறம் ஒரு வேலையா யாரும் இடைஞ்சல் செய்யாத இடத்துல இந்த காட்சி முடிக்கப்படுதுன்னு சொல்லி இருக்கிறார்.