மத்திய பிரதேச மாநிலம் நர்மதாபுரத்தில் நெடுஞ்சாலையை 10 அடி நீளம் உள்ள பாம்பு ஒன்று பாதுகாப்பாக கடக்க இளைஞர் ஒருவர் உதவிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த மலைப்பாம்பானது சாலையில் கடந்து செல்ல முடியாமல் கிடந்துள்ளது.

இதனால் அங்கு சென்ற இளைஞர் ஒருவர் அந்த பாம்பு சாலையை கடந்து செல்வதற்காக போக்குவரத்தை நிறுத்தியதோடு 10 நிமிடங்களுக்கு மேல் அந்த பாம்பிற்கு உதவி செய்திருக்கிறார். இந்த வீடியோவை பார்த்து இணையவாசிகளோ இளைஞர் பொறுப்போடு நடந்து கொண்டதற்கு பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.