ஐஆர்எஸ் அதிகாரியான சச்சின் சாவந்த், பிரபல நடிகை நவ்யா நாயரை சந்திக்க குறைந்தது பத்து முறையாவது கொச்சிக்கு வந்ததாக அமலாக்க இயக்குனரகத்தின் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது. சச்சின் சாவந்த் பணமோசடி வழக்கில் விசாரணையை எதிர்கொள்கிறார். நவ்யா நாயரை சந்திக்க அல்ல, கோவிலுக்கு செல்வதற்காக கொச்சி வந்ததாக சச்சின் சாவந்த் அமலாக்கத்துறையிடம் தெரிவித்துள்ளார்.

ஆனால் சச்சினும் நவ்யாவும் டேட்டிங்கில் இருந்தது தெரியவந்துள்ளது. மேலும், நடிகைக்கு பல லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள், பரிசுகளையும் சச்சின் சாவந்த் வழங்கியிருப்பதும் விசாரணையில் கண்டறிந்துள்ளனர். இந்த வழக்கில் நடிகையும் சேர்க்கப்பட்டுள்ளார்.