முதன்முதலாக மலையாள சினிமாவில் அறிமுகம் ஆகிய அதன் பிறகு தமிழ் சினிமாவில் கலக்கியவர் தான் நடிகை சினேகா. என்னவளே என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமானார். ஆனால் அந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவில் ஓடாததால் தெலுங்கு படத்தில் நடிக்க சென்றார். பின்னர் விஜய்யோட சேர்ந்து வசீகரா படத்தில் நடித்த அனைவருக்கும் பிடித்த ஒரு நடிகையாக மாறினார். அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வெற்றி நடிகையாக மாறினார். இவருடைய நடிப்பிற்கு மட்டுமல்ல சிரிப்பிற்கும் அந்த அளவுக்கு ரசிகர்கள் இருந்தனர். இதனால் இவர் புன்னகை அரசி என்று பெயர் வாங்கி விட்டார். இதற்கிடையில் பிரசன்னாவை காதலித்து இரு வீட்டார் சம்பதத்தோடு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகளும் இருக்கிறார்கள். இந்த நிலையில் அவ்வப்போது தன்னுடைய கலக்கலான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வரும் சினேகா தற்போது குடும்பத்தோடு இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. சினேகாவிற்கு மொத்தம் இரண்டு அண்ணன்களும், ஒரு அக்காவும் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் திருமணம் செய்து பிள்ளைகளோடும் குடும்பத்தோடும் இருக்கிறார்கள். அதில் ஒரு அண்ணன் கோவிந்தராஜ் கலா மாஸ்டரின் முன்னாள் கணவர் ஆவார். இவர்கள் திருமணம் 1997 ஆம் வருடம் நடந்தது. அதன் பிறகு 1999 ஆம் ஆண்டு விவகாரத்து செய்துள்ளனர்.