நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரான குஷ்பு தனது ட்விட்டரில், ஒருவரை சேரி பாஷை என விமர்சித்திருந்தார். இதற்கு அந்த பதிவை நீக்க கோரியும், மன்னிப்பு கேட்க கோரியும் பலரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும், குஷ்பு சேரி என்பதற்கு இதுவரை யாருக்கும் தெரியாத விளக்கம் ஒன்றையும் தெரிவித்தார்.

“அதாவது சேரி என்றால் அன்பு என்றார்” இதற்கும் கடும் கண்டனங்கள் எழுந்தது. மேலும், இன்று மாலைக்குள் இதற்காக குஷ்பு மன்னிப்பு கேட்காவிட்டால் அவரது வீட்டை முற்றுகையிடப்போவதாக காங்கிரஸ். அறிவித்திருந்தது. இதையடுத்து, குஷ்பு வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.