விஜய் தொலைக்காட்சியின் ஒளிபரப்பப்பட்டு வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டார்கள். தற்போது ஒரு மாதம் முடிவடைந்துவிட்டது. இதிலிருந்து அனன்யா, பவா செல்லத்துரை, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்ன பாரதி, மற்றும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு பிரதீப், ஐஷு, கானா பாலா ஆகிய 9 பேர் வெளியேறியுள்ளனர். இந்த நிலையில் தற்போது 50 நாளை கடந்து செல்லும் பிக்பாஸில் யாரும் எதிர்பாராத திருப்பமாக பூகம்பம் டாஸ்க்கில் தோற்றதால்  மூன்று பேர் வெளியேற உள்ள நிலையில் ஏற்கனவே வெளியே சென்ற போட்டியாளர்கள் உள்ளே வர இருக்கிறார்கள்.

தற்போது வெளியான ப்ரோமோ காட்சியை பார்க்கும்போது நிக்சன்  நடந்து கொள்ளும் விதம் மணிக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மணியால் அதை பொறுத்துக் கொள்ளவும் முடியவில்லை என்றும் அப்படி இல்லை என்றால் நான் வெளியேறுகிறேன் என்றும் கூறியுள்ளார்.