திரும்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கதிர்‌. இவர் நடிகர் விஜயின் தீவிர ரசிகர். இவர் தற்போது நடிகர் விஜய்க்காக கவிதை எழுதி உலக சாதனை படைத்துள்ளார். அதாவது கேரள மாநிலத்தில் உள்ள யுனிவர்சல் அச்சீவர் புக் ஆப் ரெக்கார்ட் மற்றும் பியூச்சர் கலாம் புக் ஆப் ரெக்கார்டு ஆகிய நிறுவனங்களின் முன்னிலையில் சாதனை படைத்துள்ளார்.

இவர் கடந்த 16-ஆம் தேதி காலை 11 மணிக்கு தொடங்கி அடுத்த நாள் இரவு 11 மணி வரை எழுதியுள்ளார். இவர் மொத்தமாக 36 மணி நேரத்தில் 10000 வரிகளில் கவிதை எழுதியுள்ளார். இவருக்கு சான்றிதழ்கள் மற்றும் விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் கதிருக்கு விஜயின் ரசிகர்கள் பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.