எஸ்வி சேகருக்கு விதிக்கப்பட்ட ஒரு மாத சிறை தண்டனையை நிறுத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெண் பத்திரிக்கையாளர் குறித்து சர்ச்சை கருத்து பதிவிட்ட வழக்கில் எஸ்.வி சேகருக்கு ஒரு மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது. எம்பி, எம்எல்ஏ மீதான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து எஸ்வி சேகர் மேல்முறையீடு செய்தார்.

நடிகர் எஸ்வி சேகரின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் ஒரு மாத சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது. எஸ்வி சேகர் மனுவிற்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை பதிலளிக்க உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார்.