வடிவேல், விவேக் உள்ளிட்டோருடன் பல படங்களில் நடித்த நகைச்சுவை நடிகர் ஜெயமணி கிண்டி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை கிண்டி பகுதியில் நடைபயிற்சி சென்ற ஜெயமணி, அங்கு நீதிபதி ஒருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும், அவரை அடிக்கவும் பாய்ந்ததாக தெரிகிறது. இதையடுத்து நீதிபதி அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த கிண்டி போலீசார், ஜெயமணியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.