ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் அண்மையில் சொந்த மண்ணில் சிஎஸ்கே தோல்வி அடைந்தது. இதனைத் தொடர்ந்து கேப்டன் ருதுராஜ் மற்றும் தோனி குறித்து முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு தவறாக பேசியதாக தகவல் வெளியானது. இது குறித்து அவர் அளித்துள்ள விளக்கத்தில், நான் லக்னோ அணிக்கு எதிரான போட்டி நடைபெற்ற போது வர்ணனை செய்யவே இல்லை. என்னுடைய பண்ணை தோப்பில் மாம்பழங்களை பதித்துக் கொண்டிருந்தேன். எப்படி நான் பேசி இருக்க முடியும்? பொய் தகவல்களை பரப்பாதீர் என்று கூறியுள்ளார்.