ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் 20 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி டெல்லி அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த போட்டியின் போது தனக்கு அவுட் கொடுத்தது தொடர்பாக அங்கிருந்த நடுவர்களுடன் ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் வாக்குவாதம் செய்தார். இதனால் அவர் ஐபிஎல் விதிமுறைகளை மீறியதாக கூறி அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அதன்படி அவருடைய ஊதியத்தில் 30 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.