
எந்த தேர்தலாக இருந்தாலும் தனித்து களம் காணும் நாம் தமிழர் கட்சி ஒரு இடங்களைக்கூட வெல்ல முடியாமல் திணறி வருகிறது. நாம் தமிழர் கட்சியின் தொடர் தோல்விகள் குறித்து பேட்டி அளித்த சீமான், தோல்விகள்தான் வெற்றியின் தாய் என்றார். எளிதில் வென்றவனின் இதயம் மலரினும் மெலிதாக இருக்கும். ஆனால், தோற்று தோற்று வென்றவனின் இதயம் இரும்பை விட உறுதியாக இருக்கும் என தனக்கே உரித்தான நடையில் விளக்கினார்.