தொடக்கக்கல்வி பட்டய தேர்வுக்கான விடைத்தாள் நகலை இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் தொடக்கக்கல்வி பட்டய தேர்வு எழுதி விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த தேர்வர்கள் அதனை அக்டோபர் 31 நண்பகல் 12:00 மணி முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இதனைத் தொடர்ந்து மறு கூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பினால் அதே இணையதளம் முகவரியில் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கொள்ளலாம் எனவும் பூர்த்தி செய்து விண்ணப்பத்துடன் அதில் குறிப்பிட்டுள்ள கட்டணத் தொகையை நவம்பர் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் நேரடியாக செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.