தை அமாவாசையான இன்று முன்னோர்களுக்கு படையல் மற்றும் தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். இந்த ஆண்டு தை அமாவாசையானது வெள்ளிக்கிழமையில் வந்துள்ளதால் ஒரு அரிதான அமாவாசை என்றே கூறுகின்றனர். இந்த நாளில் விரதம் இருந்து புனித நீராடினால் பாவங்கள் அனைத்தும் நீங்கும் என்பது ஐதீகம். காலை 8.05 மணிக்கு தொடங்கி நாளை அதிகாலை 4.28 மணிக்கு முடிவடைகிறது. காலை 9.30 மணி முதல் 10.30 மணிக்குள் திதி கொடுக்க நல்ல நேரமாகும்.