தமிழகத்தில் குண்டர் சட்டத்தை தேவையில்லாமல் பயன்படுத்தக்கூடாது என்று டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு தமிழ்நாடு அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹஸன் முகமது ஜின்னா கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், தமிழகத்தில் பொது அமைதி பாதிக்கப்படும் சந்தர்ப்பங்களில் மட்டுமே குண்டர் சட்டத்தை பயன்படுத்த வேண்டும். கடுமையான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது மட்டுமே குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவையில்லாமல் குண்டர் சட்டத்தை பயன்படுத்தக் கூடாது என்று அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.