தமிழகத்தில் அரசு துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் அனைத்தும் அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக நிரப்பப்பட்டு வருகின்றன. அவ்வகையில் தற்போது வன பாதுகாவலர் பதவிக்கான முதற்கட்ட தேர்வுகள் நடைபெற உள்ள நிலையில் தேர்வு மையங்கள் பற்றி அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. அதாவது இந்த தேர்வு மையங்கள் தற்போது மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

வருகின்ற மே மூன்றாம் தேதி நடைபெற உள்ள முதற்கட்ட தேர்வுகள் சில நிர்வாக காரணங்களால் 22 மாவட்ட மையங்களில் மட்டுமே நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அறிவிக்கப்பட்டுள்ள முதல் கட்ட தேர்வுக்கான மாவட்ட மையங்களை தேர்வு செய்த விண்ணப்பதாரர்கள் இந்த 22 மையங்களில் ஏதேனும் ஒன்றில் எழுத மீண்டும் ஒதுக்கப்படுவார்கள் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.