10 மற்றும் 12ஆம் வகுப்பு CBSE மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வரும் பிப். 15ஆம் தேதி தொடங்குகிறது. மாணவர்கள் தேர்வுக்கு தயாராகி வருகிறார்கள். இந்நிலையில், டைப்-1 நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்ட மாணவர்கள், மாத்திரைகள், இனிப்பு, பழங்கள், புரோட்டின் உணவுகள், தண்ணீர் பாட்டில் போன்ற பொருட்களை தேர்வு அறைக்குள் எடுத்துச் செல்லலாம் என CBSE அனுமதி வழங்கியுள்ளது. மாணவர்கள் நீரிழிவு நோய் இருப்பதற்கான மருத்துவ சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டியது அவசியம்