தமிழ்நாடு டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் கள ஆய்வாளர், வரைவாளர், உதவி வரைவாளர் உள்ளிட்ட பணிகளுக்கான தேர்வை கடந்த வருடம் நவம்பர் 6-ம் தேதி நடத்தியது. இந்த தேர்வு முடிவுகள் கடந்த 15-ம் தேதி வெளியிடப்பட்ட நிலையில், தற்போது தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடல் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கவுன்சிலிங் போன்றவைகள் நடைபெற இருக்கிறது. அதன்படி அடுத்த கட்ட தேர்வுக்கு தகுதியான நபர்களின் பட்டியல் டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்கள் மார்ச் 6-ம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ள வேண்டும். இந்த சான்றிதழ் சரிபார்ப்பின் போது விண்ணப்பதாரர்களின் வயது, PSTM, கல்வி தகுதி, உரிமைக்கோரல்களின் உண்மை நிலவரம் போன்றவைகள் குறித்து ஆய்வு செய்யப்படும். மேலும் அதற்குப் பிறகு கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.