மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 42 மக்களவைத் தொகுதிகளில் 3இல் 2 பங்கு இடங்களில் பாஜக வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது. இது மம்தா அரசுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. குறிப்பாக சந்தேஷ்காலி விவகாரம், மோடி, அமித்ஷாவின் பிரசார யுக்தி ஆகியவை காரணமாக பார்க்கப்படுகிறது. இதனிடையே, INDIA கூட்டணியில் TMC, காங்கிரஸ் உள்ள நிலையில், மேற்கு வங்கத்தில் 2 கட்சிகளும் தனித்தே போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு படி, பாஜக மீண்டும் வென்றால் அது மோடி அரசுக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாக பார்க்கப்படும். குறிப்பாக, உலகளவில் இந்தியா, 5ஆவது பெரிய பொருளாதார நாடு, டிஜிட்டல் பரிவர்த்தனையில் முதலிடம், உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவித்தல் போன்ற பல்வேறு காரணங்களால் வெற்றி வாய்ப்பு மீண்டும் கிடைத்துள்ளதாக பார்க்கப்படும் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
