பெரம்பலூர் தொகுதியில் தாமரை சின்னத்தில் போட்டியிடும் டி ஆர் பாரிவேந்தரை ஆதரித்து அண்ணாமலை பரப்புரை மேற்கொண்டார். அப்போது, தேர்தலுக்கு தேர்தல் பொய் வாக்குறுதிகளை கொடுக்கும் திமுகவை நம்ப வேண்டாம். மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற தூய்மையான நோக்கத்தில் பாரிவேந்தர் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.