பீகார் மாநிலத்தில் தற்போது ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. குற்றச் செயல்களில் ஈடுபட்டு நீண்ட நாட்களாக சிறையில் இருந்து வந்த அசோக் மஹதோ (56) என்பவர் இந்த மக்களவை தேர்தலில் போட்டியிட உள்ளார். ஆனால், சூழ்நிலை சாதகமாக இல்லாததால், ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் யாதவை அணுகினார்.

திருமணம் செய்து கொண்டால் மனைவிக்கு சீட் கொடுப்பதாக லாலு ஆலோசனை கூறியுள்ளார். அவர் 56 வயதில் 46 வயதான அனிதா என்ற பெண்ணை மணந்தார். கட்சி உறுதி அளித்த படி, மஹதோவின் மனைவி அனிதாவுக்கு ஆர்ஜேடி சார்பில், முங்கர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.