வருகின்ற 2024 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன் என்று பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். 2024 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோவையில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அண்ணாமலை, 2024 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்பதற்காகத்தான் நான் பாஜகவிற்கு வந்து உள்ளேன். கோவை தொகுதியில் நிற்பதற்கு கட்சியில் திறமையான பலரும் இருக்கின்றனர். அவர்களை வெற்றி பெற செய்வது தான் என்னுடைய வேலை. தமிழகத்தை விட்டு டெல்லி அரசியலுக்கு செல்ல விருப்பமில்லை. எந்த மண்ணிலையே என்னுடைய அரசியல் இருக்க வேண்டும் என விரும்புகிறேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.