தேர்தல்களில் இந்திய குடிமகன் அல்லாத ஒருவர் வாக்களிக்க முடியாது. வேறொரு நாட்டின் குடியுரிமை பெற்ற வெளிநாடு வாழ் இந்தியர் வாக்களிக்க முடியாது. ஏதேனும் குற்ற வழக்குகளில் குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்து தண்டனை அனுபவித்து வந்தால் வாக்களிக்க முடியாது. ஒன்றுக்கும் மேற்பட்ட வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளவர்களும் தேர்தலில் வாக்களிக்க முடியாது. மனநலம் குன்றியவர்கள் மற்றும் நீதிமன்றத்தால் மனநலம் குன்றியவர்கள் என அறிவிக்கப்பட்டவர்களும் இந்த தேர்தலில் வாக்களிக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.