நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்டத்திலேயே தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு தேர்தல் தேதி முன்கூட்டியே தெரிந்ததால்தான் அடிக்கடி தமிழகத்தில் பிரசாரத்திற்கு வந்தாரா? என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன. இது அப்பட்டமான ஜனநாயக படுகொலை என்றும் கண்டனம் தெரிவித்துள்ளன.