நடப்பு ஐபிஎல் தொடரில், பல்வேறு அதிசயங்கள் நிகழ்ந்து வருகிறது. டிசம்பரில் நடந்த ஐபிஎல் ஏலத்தில், ஷஷாங்க் சிங் என்பவரை பஞ்சாப் அணி ரூ.20 லட்சத்துக்கு மாற்றி வாங்கியது. வேறு வழியின்றி அணியில் வைத்துக் கொள்ளப்பட்ட அவர், பெங்களூரு அணிக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில் களமிறங்கினார். 1 பவுண்டரி, 2 சிக்சர்கள் என விளாசிய அவர், 8 பந்துகளில் 21 ரன்கள் குவித்து தனது திறமையை வெளிப்படுத்தினார்.