தலைநகர் சென்னைக்கு  தினமும் லட்சக்கணக்கான மக்கள் பயணம் செய்து வருகிறார்கள். மதுரை மற்றும் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை, எழும்பூருக்கு விரைவு ரயிலில் அதிகமாக பயணிக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலும் பரங்கிமலை, கிண்டி தி நகர் மற்றும் பிற கிளைகளுக்கு செல்ல தாம்பரத்தில் இறங்குகின்றனர். அது மட்டும் இன்றி  சென்னை எழும்பூர் வரை ரயில் டிக்கெட் எடுத்துக்கொண்டு தாம்பரத்தில் இறங்கி புறநகர் ரயில்களில் பயணம் செய்கிறார்கள்.

ஆனால் தி நகர் வரை முன்பதிவு செய்யப்பட்ட பயணி புறநகர் ரயிலில் பயணித்ததால் அந்த பயணிக்கு டிக்கெட் பரிசோதகர் அபராதம் அளிக்கப்பட்ட நிலையில் சென்னை ரயில்வே கோட்டம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதாவது முன்பதிவு செய்துள்ள டிக்கெட் அல்லது உயர் வகுப்பு டிக்கெட்டுகளை வைத்திருக்கும் அனைத்து பயணிகளும் புறநகர் ரயில்களில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது.