தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கட்டுமான பிரச்சனைகள் கடந்த 2017 ஆம் ஆண்டில் இருந்து தொடர்கிறது. கடந்த 2017 ஆம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் அடிக்கல் நாட்டி நடிகர் சங்க கட்டிட பணிகளை தொடங்கி வைத்தார். ஆனாலும் சில பிரச்சனைகளால் இந்த பணிகள் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது நடிகர் சங்க கட்டிடத்திற்காக நிதி உதவி வழங்கியுள்ளார். அதன்படி இவர் தன்னுடைய சொந்த வருமானத்தில் இருந்து 50 லட்ச ரூபாயை நிதியாக வழங்கியுள்ளார். மேலும் இதற்கு முன்னதாக நடிகர் கமல்ஹாசன் ஒரு கோடி ரூபாயும் நடிகர் விஜய் ஒரு கோடி ரூபாயும் வழங்கி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.