தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பாரத் கௌரவ் சுற்றுலா ரயில் மூலம் சிறப்பு யாத்திரைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தீபாவளி அன்று காசியில் கங்கா ஸ்நானம் செய்து பிறகு திரும்பும் வழியில் ராமேஸ்வரம் கோவிலில் தரிசிக்கும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. தென்காசியில் இருந்து புறப்படும் இந்த ரயில் சிவகாசி, மதுரை, திருச்சி, கும்பகோணம் மற்றும் சென்னை வழியாக காசி அலகாபாத் கையா மற்றும் ராமேஸ்வரம் ஆகிய கோவில்களுக்கு சென்று வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.