திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இன்று பழனியில் 8 பேருடன் ஒரு கார் கொடைக்கானல் சென்றது. அப்போது அந்த கார் எதிர்பாராதவிதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து 200 அடி பள்ளத்தில் பாய்ந்து மரத்தின் மீது மோதி நின்றது.

இந்த விபத்தில் காரில் இருந்து 8 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி விட்டனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 8 பேரையும் பத்திரமாக மீட்டனர். இதுகுறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது