துலாம் ராசி அன்பர்களே,

இன்று சந்தோஷம் அதிகரிக்கும் நாளாக இருக்கும். தொழில் முன்னேற்றம் கருதி சில நபர்களுக்கு உதவிகளை செய்து கொடுப்பீர்கள். உறவினர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும். மன அழுத்தம் விலகிச் செல்லும். ஆடம்பர பொருள் சேர்க்கை ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு இடம் மாற்றம் ஏற்படலாம். கோபத்தை தவிர்க்கவும். பேச்சில் கவனம் தேவை.

அரசியல்வாதிகள் மக்களின் தேவைகளை அறிந்து செயல்பட்டால் வெற்றி காணலாம். எந்த ஒரு செயலிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. வரவேண்டிய பணம் தாமதமாக தான் வரும். யாரிடமும் கோபப்பட வேண்டாம். மன அமைதியை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். யார் மனதையும் புண்படுத்தாமல் பேச வேண்டும். கேலி கிண்டல் பேச்சுக்களுக்கு உள்ளாக்க வேண்டாம்.

இன்று மாணவர்கள் மிகவும் பொறுப்புடன் செயல்படுங்கள். யோசித்து சில முடிவுகளை எடுக்க வேண்டும். யாருக்கும் உதவுவதாக நினைத்து சிக்கல்களில் சிக்கிக் கொள்ள வேண்டாம். படித்து முன்னேற வேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குரு பகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: ஐந்து மற்றும் ஆறு

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் சிவப்பு நிறம்