கடந்த 6-ம் தேதி அதிகாலை துருக்கி, சிரியா எல்லையில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர்  அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 7.8 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் போது துருக்கி, சிரியாவின் எல்லை நகரங்களில் கட்டிடங்கள் குலுங்கியது. இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் துருக்கி, சிரியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இந்நிலையில் நெதர்லாந்து ஆய்வாளர் பிரான்க் ஹூகர்பீட்ஸ் என்பவர் இந்த நல நடுக்கம் ஏற்படுவதை முன்பே துல்லியமாக கணித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

நெதர்லாந்தில் உள்ள புவியியல் ஆய்வு நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வரும் இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கடந்த மூன்றாம் தேதி அன்று ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது, மத்திய தெற்கு துருக்கி, சிரியா, ஜோர்டான், லெபனான் பகுதியில் 7.5 லிட்டர் அளவில் நிலநடுக்கம் கூடிய விரைவில் அல்லது தாமதமாக பதிவாகும் என தெரிவித்திருந்தார். ஆனால் அதனை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளாத நிலையில் தற்போது அவரது பதிவு வைரலாகியுள்ளது. மேலும் அவர் இந்தியா, பாகிஸ்தான் பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதே ஆய்வாளர் நில அதிர்வுகள் இறுதியில் பாகிஸ்தானையும், இந்தியாவையும் கடந்து இந்திய பெருங்கடலில் முடிவடையும் என தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் ஆப்கானிஸ்தானில் தொடங்கும் ஒரு பெரிய நிலநடுக்கம் இந்தியா பாகிஸ்தான் நாடுகளிலும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கூறியுள்ளார். இதனையடுத்து நில அதிர்வு இறுதியில் பாகிஸ்தான் இந்தியாவை கடந்து இந்திய பெருங்கடலில் முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.