துருக்கி நாட்டில் உள்ள கார்ஸ் மாகாணத்தில் தேசிய நெடுஞ்சாலையில் 40 பயணிகளுடன் பேருந்து பயணித்துக் கொண்டிருந்தது. இந்த பேருந்து காராகுட் எனும் பகுதிக்கு சென்றபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை  இழந்து சாலை அருகில் இருந்த 50 மீட்டர் ஆழ பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக் குழுவினர் பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.இந்த விபத்தில் 23 பேர் படுகாயம் அடைந்த நிலையில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகின்றனர்.