ஆர்சிபி வீரர் விராட் கோலிக்கு தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளதாகவும், அவரின் உயிருக்கே அச்சுறுத்தல் இருப்பதாகவும் குஜராத் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர். இதனால் இன்று நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற இருந்த பயிற்சியை ஆர்சிபி அணி ரத்து செய்துள்ளது என்று கூறப்பட்டது .

இரண்டு நாட்களுக்கு முன்னதாக அகமதாபாத் விமான நிலையத்தில் சந்தேகத்தின் பேரில் 4 பேரை மாநில தீவிரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்றும் தகவல் வெளியானது. இந்நிலையில் தீவிரவாத அச்சுறுத்தல் ஏதும் இல்லை. வெப்ப அலை காரணமாகவே RCB அணியின் பயிற்சி ரத்து செய்யப்பட்டுள்ளது என்று  குஜராத் கிரிக்கெட் சங்கம் விளக்கம் அளித்துள்ளது.